என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2021 7:09 AM GMT (Updated: 18 Jan 2021 7:09 AM GMT)
பண்ருட்டியில் குடிபோதையில் இருந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் இந்திரா காந்தி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த முதியவர் திடீரென தான் அணிந்திருந்த கைலியை கழற்றி, ஓட்டலின் முன்புள்ள கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதாசிவம் (வயது 55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாசிவம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X