என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்16 Jan 2021 4:35 AM GMT (Updated: 16 Jan 2021 4:35 AM GMT)
பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை கழிக்கவும், மலைப்பிரதேசமான ஊட்டியில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு ரகங்களை சேர்ந்த மலர்கள், அலங்கார செடிகளை கண்டு ரசித்ததோடு, செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும், அதில் நனைந்தபடி பூங்காவை கண்டு களித்தனர். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் இருந்து நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை பார்க்கலாம். ஆனால், நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் தொட்டபெட்டா மலை சிகரத்தை கண்டு ரசித்தனர். கடும் குளிர் காரணமாக குல்லா, உல்லன் ஆடைகளை அணிந்து இருந்தனர். தொட்டபெட்டா சாலையோரத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிட முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக மிதி படகு, துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டது. பனிமூட்டம் இல்லாதபோது மிதி படகுகள் இயக்கப்பட்டன. அதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்தனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். அதேபோல் ஊட்டி அருகே பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. தொடர் விடுமுறையால் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகையால் ஊட்டி களை கட்டி உள்ளது.
நீலகிரி மலைரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மலைரெயிலில் பயணம் செய்வது மிகவும் குதூகலமாக இருக்கும். பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மலை ரெயிலில் முன்பதிவு செய்து ஊட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தில் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அப்போது ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நிற்கிறது.
நேற்று மலை ரெயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் குன்னூர் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கி குழு புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதனால் குன்னூர் ரெயில் நிலையம் சுற்றுலா பயணிகளால் களைகட்டியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை கழிக்கவும், மலைப்பிரதேசமான ஊட்டியில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு ரகங்களை சேர்ந்த மலர்கள், அலங்கார செடிகளை கண்டு ரசித்ததோடு, செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும், அதில் நனைந்தபடி பூங்காவை கண்டு களித்தனர். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் இருந்து நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை பார்க்கலாம். ஆனால், நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் தொட்டபெட்டா மலை சிகரத்தை கண்டு ரசித்தனர். கடும் குளிர் காரணமாக குல்லா, உல்லன் ஆடைகளை அணிந்து இருந்தனர். தொட்டபெட்டா சாலையோரத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிட முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக மிதி படகு, துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டது. பனிமூட்டம் இல்லாதபோது மிதி படகுகள் இயக்கப்பட்டன. அதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்தனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். அதேபோல் ஊட்டி அருகே பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. தொடர் விடுமுறையால் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகையால் ஊட்டி களை கட்டி உள்ளது.
நீலகிரி மலைரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மலைரெயிலில் பயணம் செய்வது மிகவும் குதூகலமாக இருக்கும். பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மலை ரெயிலில் முன்பதிவு செய்து ஊட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தில் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அப்போது ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நிற்கிறது.
நேற்று மலை ரெயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் குன்னூர் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கி குழு புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதனால் குன்னூர் ரெயில் நிலையம் சுற்றுலா பயணிகளால் களைகட்டியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X