என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே சாலை சீரமைக்கப்படுமா?
Byமாலை மலர்16 Jan 2021 12:18 AM GMT (Updated: 16 Jan 2021 12:18 AM GMT)
சிவகாசி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி:
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட எஸ்.என்.புரம். பஞ்சாயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி உள்ளது.
இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து நகர பகுதிக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதனால் மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கி கீழே விழும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பகுதியில் உள்ள மண் சாலையை, தார் சாலையாக மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத இப்பகுதியை சிவகாசி ஒன்றிய அதிகாரிகளும், செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் ஸ்டேட் பாங்க் காலனி வந்து ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X