search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சிதம்பரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை

    சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×