என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் உள்பட 4 மாவட்டத்துக்கு 42,100 டோஸ் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு
Byமாலை மலர்13 Jan 2021 7:01 AM GMT (Updated: 13 Jan 2021 7:01 AM GMT)
வேலூர், திருண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
உலகத்தை ஆட்டுவிக்கும் கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசியை தயார் செய்து வருகின்றன. இந்திய நாடும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட 500 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்துக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு 2 தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 28 நாட்களுக்கு பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும். தமிழக அரசு உத்தரவு வழங்கிய உடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என வேலூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகத்தை ஆட்டுவிக்கும் கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசியை தயார் செய்து வருகின்றன. இந்திய நாடும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட 500 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்துக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு 2 தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 28 நாட்களுக்கு பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும். தமிழக அரசு உத்தரவு வழங்கிய உடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என வேலூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X