search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பள்ளிகொண்டா அருகே வேன் மோதி பெண் பலி

    பள்ளிகொண்டா அருகே வேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசுமாட்டை கட்டிவிட்டு, மாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த வேன் மகேஸ்வரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×