search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராயக்கோட்டை அருகே பெண் தற்கொலை

    ராயக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி அமுதா (வயது 45). கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 6-ந் தேதி அமுதா எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து பெண்ணின் தம்பி பழனிவேல் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×