என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- பிஆர் பாண்டியன்
Byமாலை மலர்10 Jan 2021 5:17 AM GMT (Updated: 10 Jan 2021 5:17 AM GMT)
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் சீர்காழிக்கு வந்தது. அப்போது தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசுகையில், மத்திய அரசு விவசாயிகளின் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயத்தை பாதிக்கும் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழக அரசு உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் முருகன் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்தி் கொள்ள வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
அப்போது விவசாய சங்க தலைவர்கள் விசுவநாதன், சிவப்பிரகாசம், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X