என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்சுருட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்9 Jan 2021 10:56 AM GMT (Updated: 9 Jan 2021 10:56 AM GMT)
மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ராம்தேவ் நல்லூர் பொட்டகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 49). கூலி தொழிலாளியான இவருக்கும், காட்டகரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் ஜெயபிரகாஷ், சின்னதுரை மகன் விஜய்(23) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று கலியபெருமாள் மீன்சுருட்டி கடைவீதிக்கு சைக்கிளில் வந்தபோது, அவருக்கு பின்னால் ஜெயபிரகாஷ், விஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து, சைக்கிள் மீது மோதியதில் கலியபெருமாள் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபா, 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X