search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மீன்சுருட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல்- வாலிபர் கைது

    மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ராம்தேவ் நல்லூர் பொட்டகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 49). கூலி தொழிலாளியான இவருக்கும், காட்டகரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் ஜெயபிரகாஷ், சின்னதுரை மகன் விஜய்(23) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. 

    சம்பவத்தன்று கலியபெருமாள் மீன்சுருட்டி கடைவீதிக்கு சைக்கிளில் வந்தபோது, அவருக்கு பின்னால் ஜெயபிரகாஷ், விஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து, சைக்கிள் மீது மோதியதில் கலியபெருமாள் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். 

    இதுகுறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபா, 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×