என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேன்கனிக்கோட்டையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    தேன்கனிக்கோட்டையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே உள்ள காடுகெம்பத்பள்ளியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×