என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே மனைவிக்கு கத்திக்குத்து- ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்4 Jan 2021 7:38 AM GMT (Updated: 4 Jan 2021 7:38 AM GMT)
வேதாரண்யம் அருகே மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு வடக்கு ஜல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருமறைச்செல்வி (வயது32). இவருடைய கணவர் ராஜ்குமார்(37). ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் திருமறைச்செல்வி வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, ராஜ்குமாரையும், திருமறைச்செல்வியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் திருமறைச்செல்வி அங்கிருந்து சென்று வேதாரண்யம் பஸ் நிலையத்தில் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் மனைவி திருமறைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X