search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    மொடக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

    மொடக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே உள்ள பூனாச்சி புதுவலவு காலனியை சேர்ந்தவர் சீரங்கன். இவருடைய மகன் அரவிந்த் (வயது 16). 8-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் மேற்கொண்டு படிக்கவில்லை. இதனால் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் நண்பர்களுடன் எழுமாத்தூர் பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு அவர் குளிக்க சென்று உள்ளாார்.

    குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு அரவிந்த் சென்றுவிட்டார். இதில் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி இறந்த அரவிந்தனின் உடலை மீட்டனர். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×