என் மலர்
செய்திகள்

தற்கொலை
பெரிய காலாப்பட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெரிய காலாப்பட்டில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு:
பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மணிபால் (வயது 28). இவரது மனைவி திவ்யா (25). இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தையும் 4 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த திவ்யா வீட்டில் புடவையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுபற்றி திவ்யாவின் தந்தை அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திவ்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தாசில்தார் விசாரித்து வருகிறார்.
Next Story






