என் மலர்
செய்திகள்

மரணம்
வந்தவாசியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுமி பலி
வந்தவாசியில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
சென்னை அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் டிரைவாக வேலை பார்த்து வருபவர் சுரேஷ். இவர், வந்தவாசியில் உள்ள கே.ஆர்.கே. தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர் நேற்று வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகள் புவனேஸ்வரி (வயது 15) அடுக்கு மாடி குடியிருப்பின் 2-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர், அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.
அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள டாக்டர்கள், புவனேஸ்வரியை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






