என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் 4 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- வழங்கல் அதிகாரிகள் தகவல்
Byமாலை மலர்23 Dec 2020 9:51 AM GMT (Updated: 23 Dec 2020 9:51 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கியிருக்கும். கடந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை ஆகியவை வழக்கம்போல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் என்று மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 680 பேர் உள்ளனர். இவற்றில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வருகிற 4-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கனை வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்வார்கள். அதில், குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கியிருக்கும். கடந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை ஆகியவை வழக்கம்போல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் என்று மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 680 பேர் உள்ளனர். இவற்றில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வருகிற 4-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கனை வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்வார்கள். அதில், குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X