என் மலர்
செய்திகள்

தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே முதியவர் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 78). இவருக்கு மணிமேகலை, ராஜேஸ்வரி என 2 மனைவிகள் உள்ளனர். இந்தநிலையில், வேடியப்பனுக்கு சொந்தமான வீட்டை 2-வது மனைவி ராஜேஸ்வரிக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முதல் மனைவி மணிமேகலை மற்றும் அவரது 3 மகன்கள் கேட்டனர். இதனால் மனமுடைந்த வேடியப்பன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






