search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்

    திட்டக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    கடலூர்:

    திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவரும் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணத்தை சேர்ந்த 25 வயதுடைய வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். 

    இந்த நிலையில் இளம்பெண்ணின் பெற்றோர், மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண் தனது காதல் கணவருடன், நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அந்த இளம்பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நான் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதால், எனது பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    Next Story
    ×