என் மலர்
செய்திகள்

தற்கொலை
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28), இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனமுடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த புவனேஸ்வரியின் தந்தை பன்னீர்செல்வம் பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






