என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல் - ரூ.12 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
Byமாலை மலர்14 Dec 2020 8:40 PM GMT (Updated: 14 Dec 2020 8:40 PM GMT)
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்கர் அலி (வயது 44), சரீம் பவுலத் (20), ஷேக் அப்துல்லா (43), நதீம் கான் (30), காதர் உசேன் (47), முகமது இப்ரகீம் (44), மணிகண்டன் சுப்பிரமணி (26), சமீருல் கான் (29), அஸ்ரத் பர்வேஸ் (21), திருச்சியை சேர்ந்த யாகூப் (67), அலி (28), புதுக்கோட்டையை சேர்ந்த உசேன் (26), இளையான்குடியை சேர்ந்த முகமது அனிபா (27), தமீம் அன்சாரி (23), ஆம்பூரை சேர்ந்த முகமது பாரூக் (22) ஆகிய 15 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டி, செல்போன், கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 15 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சவுகத் அலி (28) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் 16 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 16 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்கர் அலி (வயது 44), சரீம் பவுலத் (20), ஷேக் அப்துல்லா (43), நதீம் கான் (30), காதர் உசேன் (47), முகமது இப்ரகீம் (44), மணிகண்டன் சுப்பிரமணி (26), சமீருல் கான் (29), அஸ்ரத் பர்வேஸ் (21), திருச்சியை சேர்ந்த யாகூப் (67), அலி (28), புதுக்கோட்டையை சேர்ந்த உசேன் (26), இளையான்குடியை சேர்ந்த முகமது அனிபா (27), தமீம் அன்சாரி (23), ஆம்பூரை சேர்ந்த முகமது பாரூக் (22) ஆகிய 15 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டி, செல்போன், கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 15 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சவுகத் அலி (28) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரது கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து அதில் சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் 16 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 16 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X