என் மலர்
செய்திகள்

விபத்து பலி
கொள்ளிடம் அருகே விபத்து: வாலிபர் பலி
கொள்ளிடம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே நிம்மேலி கிராமம் நடுதெருவை சேர்ந்த சின்னையன் மகன் வெங்கடேஷ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (34). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, சீர்காழிக்கு திரும்பி கொண்டிருந்தனர். சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் மதகடி என்ற இடத்தில் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வெங்கடேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த நடராஜன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






