என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறிஞ்சிப்பாடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்10 Dec 2020 3:16 PM GMT (Updated: 10 Dec 2020 3:16 PM GMT)
குறிஞ்சிப்பாடி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் மேல காலனி தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, ஆதிலட்சுமியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆதிலட்சுமி கோபித்துக் கொண்டு, குறிஞ்சிப்பாடி அருகே ரெங்கநாதபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆதிலட்சுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆதிலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X