என் மலர்
செய்திகள்

கைது
ராஜபாளையம் அருகே சூதாடிய 4 பேர் கைது
ராஜபாளையம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள நத்தம்பட்டி விநாயகர் கோவில் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கீழ ராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோவில் அருகே சூதாடியதாக சேத்தூர் பசும்பொன் (வயது 62), ஆர்.ரெட்டியப்பட்டி பேச்சிமுத்து (65), சமுசிகாபுரத்தை சேர்ந்த குருசாமி (58), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வீரசிகாமணி (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






