என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
    X
    மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவரது மூத்த மகன் முத்து கூடலிங்கம் (4). இவன் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டிலுள்ள ஸ்விட்ச் போர்டை லைட் போடுவதற்காக தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிறுவனை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்து கூடலிங்கத்தை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×