என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ராயக்கோட்டை அருகே மொபட் திருடிய 2 பேர் கைது
ராயக்கோட்டை அருகே மொபட் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் மொபட்டை நிறுத்தி இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அந்த மொபட்டை திருடிச் சென்றனர். இதுகுறித்து வெங்கடேஷ் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரணை நடத்தியதில் உத்தனப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (45), பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணேசன் (50) ஆகிய 2 பேரும் மொபட்டை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






