என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
Byமாலை மலர்30 Nov 2020 5:38 AM GMT (Updated: 30 Nov 2020 5:38 AM GMT)
வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14,440-யை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உம்பளச்சேரி பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உம்பளச்சேரி கிழக்கு பகுதியில் ராமலிங்கம் என்பவரின் வீட்டு அருகே பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய உம்பளச்சேரியை சேர்ந்த ராமலிங்கம் (வயது70), வீரப்பன் (60), கரியாப்பட்டினத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (58), யாக்கத் அலி (56), சுப்ரமணியன்(50), பாலமுருகன் (36),செல்வராஜ் (48), செண்பகராயநல்லூரைச் சேர்ந்த தனபால் (58), ஆய்மூரை சேர்ந்த அறிவழகன்(51), பாட்டாக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (56) மற்றும் தலைஞாயிறை சேர்ந்த வெற்றி அழகன் (58) ஆகிய 11 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14,440 பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X