search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்குவளை அருகே பெண் தற்கொலை

    திருக்குவளை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே திருக்குவளை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவருடைய மகள் துர்கா (வயது24).இவர் பி.எஸ்சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். துர்கா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மன உளைச்சலில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது துர்கா தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருக்குவளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், துர்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×