என் மலர்

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காய்கறிகள் வரத்து குறைவு என்பதாலும், இன்று கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை என்பதாலும் காய்கறி விலையானது நேற்று கடுமையான அளவிற்கு உயர்ந்தது.
    சென்னை:

    சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன.

    இந்தநிலையில், நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை எதிரொலியால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. அதே நேரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை. மேலும், இன்றைய தினம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பெரும்பாலான வீடுகளில் இறைச்சியை தவிர்த்து காய்கறிகள் வாங்குவார்கள். இத்தகைய காரணங்களால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை திடீரென கடுமையாக உயர்ந்ததாக காய்கறி வியாபாரி மணிகண்டன் என்பவர் தெரிவித்தார்.

    அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் விலை உயர்ந்து நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று பெரும்பாலான காய்கறிகள் நேற்று அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதன் விவரம் கிலோவுக்கு வருமாறு(அடைப்புக்குறிக்குள் நேற்று முன்தின விலை குறிப்பிடப்பட்டுள்ளது):-

    கத்தரிக்காய் - ரூ.80 (ரூ.30), வெண்டைக்காய் - ரூ.40 (ரூ.20), வெள்ளரிக்காய் - ரூ.20 (ரூ.10), கேரட் - ரூ.90 (ரூ.50), பீட்ரூட் - ரூ.60 (ரூ.35), பீன்ஸ் - ரூ.60 (ரூ.20), பாவைக்காய் - ரூ.40 (ரூ.20), சவு சவு - ரூ.30 (ரூ.10), கோவக்காய் - ரூ.40 (ரூ.10), முருங்கைக்காய் - ரூ.100 (ரூ.50), குடைமிளகாய் - ரூ.80 (ரூ.40), புடலங்காய் - ரூ.40 (ரூ.30), தக்காளி - ரூ.30 (ரூ.20), பீர்க்கங்காய் - ரூ.40 (ரூ.20), முட்டைக்கோஸ் - ரூ.40 (ரூ.20).

    இதே போன்று நேற்றுமுன்தினம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு வாழை இலையானது நேற்று ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களாக கீரைகள் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால், ரூ.5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு மல்லிக்கீரை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×