search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் பலி

    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    மானாமதுரை:

    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி காளீஸ்வரியுடன் மோட்டார் சைக்கிளில் சக்குடியில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றார். அங்கு திருமணம் முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    இவர்கள் மதுரை-ராமேசுவரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருப்புவனம் கழுகேர்கடையை சேர்ந்த முஸ்ரப்(19) என்பவர் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். காளீஸ்வரி படுகாயம் அடைந்தார். தனது கண் முன்னே கணவர் இறந்ததை அறிந்த அவர் கதறி அழுதார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்ரப்பும் படுகாயம் அடைந்தார்.

    விபத்து பற்றி அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சு விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முஸ்ரப் நேற்று பரிதாபமாக இறந்தார். காளீஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×