என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாய்மேடு அருகே மின்சாரம் தாக்கி காவலாளி பலி
Byமாலை மலர்28 Nov 2020 7:27 AM GMT (Updated: 28 Nov 2020 7:27 AM GMT)
வாய்மேடு அருகே மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சி திருக்குவளை கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது47). இவர் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்தில் உள்ள தனியார் வங்கியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியில் சுப்பிரமணியன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மெயின் சுவிட்சை ஆப் செய்யாததால் சுப்பிரமணியனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு மகேஸ்வரி (35) என்ற மனைவியும், கிஷோர் (16) என்ற மகனும், சங்கமித்ரா (14) என்ற மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X