search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளத்தில் கவிழ்ந்த காரை படத்தில் காணலாம்.
    X
    பள்ளத்தில் கவிழ்ந்த காரை படத்தில் காணலாம்.

    யானைகள் துரத்தியதால் பள்ளத்தில் கவிழ்ந்த கார்- அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்

    தாளவாடி அருகே யானைகள் துரத்தியதில் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினார்கள்.
    தாளவாடி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று முன்தினம் காரில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூட்டில் உள்ள கோவிலுக்கு சென்றார்கள். அங்கு சாமிதரிசனம் செய்து விட்டு ஈரோடு மாவட்டம் தாளவாடி வழியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேட்டுப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

    கும்டாபுரம் அடுத்த வனப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென 3 யானைகள் ரோட்டில் வந்து நின்றன. இதனால் டிரைவர் காரை நிறுத்தினார்.

    அப்போது 3 யானைகளும் காரை நோக்கி ஆவேசமாக வந்தன. இதனால் காருக்குள் இருந்தவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே டிரைவர் காரை பின்னோக்கி வேகமாக ஓட்டினார். அப்போது நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. அதன்பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து 5 பேரும் தாளவாடி பஸ்நிலையம் சென்று, அங்கிருந்து பஸ்சில் மேட்டுப்பாளையம் சென்றார்கள். பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

    பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் யானைகள் அவர்களை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டன. இல்லை எனில் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்கும். யானைகள் தனியாக நின்றால்தான் வாகனங்களை துரத்தும் கூட்டமாக இருந்தால் சாதுவாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் 3 யானைகள் சேர்ந்து காரில் சென்றவர்களை துரத்திய சம்பவம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×