search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    குடியாத்தத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

    குடியாத்தத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் தியாகிகுமரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). லுங்கி மண்டியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த இரும்பு பெட்டி திறந்து இருந்தது, அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மகேஷ் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை   நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிகுதித்து வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×