என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசியில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோ கடத்தல்- 2 நபருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்22 Nov 2020 11:24 AM GMT (Updated: 22 Nov 2020 11:24 AM GMT)
வந்தவாசியில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்திச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆதம். அவரது மகன் மஸ்தான் (வயது 23), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், அவரிடம் உத்திரமேரூர் அருகில் உள்ள அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டும் என்று கூறி, ஆட்டோவில் பயணம் செய்தனர்.
மங்கநல்லூர் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் திடீரென மஸ்தானை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கரராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த மஸ்தானை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை கடத்தி சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வந்தவாசி கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆதம். அவரது மகன் மஸ்தான் (வயது 23), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், அவரிடம் உத்திரமேரூர் அருகில் உள்ள அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டும் என்று கூறி, ஆட்டோவில் பயணம் செய்தனர்.
மங்கநல்லூர் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் திடீரென மஸ்தானை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கரராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த மஸ்தானை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை கடத்தி சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X