என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருத்தாசலம் அருகே மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன்
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் பில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). விவசாயி. இவரது மனைவி கலியம்மாள் (54).
கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றி தகராறாக மாறியது.
ஆத்திரம் அடைந்த தங்கவேல் தனது மனைவி கலியம்மாளை சரமாரியாக தாக்கினார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து கலியம்மாளின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் கலியம்மாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு பிணமாக கிடந்த கலியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்