search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    விராலிமலை அருகே இரும்பு தகடு விழுந்து தொழிலாளி பலி

    விராலிமலை அருகே இரும்பு துண்டு விழுந்து தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா பிராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாகாளி (வயது 50). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

    அப்போது கிரேனில் இரும்பு தகடை தூக்கும் போது எதிர்பாராத விதமாக, அது மாகாளியின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×