என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - அண்ணன், தம்பி கைது
Byமாலை மலர்20 Nov 2020 7:40 AM GMT (Updated: 20 Nov 2020 7:40 AM GMT)
கடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராயபெருமாள் நேற்று நகராட்சி பூங்கா அருகில் வாகன சோதனை நடத்தி வந்தார். அப்போது புதுச்சேரி சாரம் சக்திநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் கிருஷ்ணமூர்த்தி (32), சவுந்தரராஜன் (33) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராயபெருமாள் வழிமறித்து சோதனை செய்தார். அதற்கு அவர்கள் நாங்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி கோவிந்தராயபெருமாள் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X