என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
நீலகிரியில் பட்டாசு வெடித்த 30 பேர் மீது வழக்கு
நீலகிரியில் அனுமதி இல்லாத நேரங்களில் பட்டாசு வெடித்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஊட்டி:
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அதிக ஓசை எழுப்பக்கூடிய தடை செய்த பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியன்று நீலகிரியில் போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பலர் அனுமதி இல்லாத நேரங்களில் பட்டாசுகளை வெடித்தனர். இதையடுத்து 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story






