search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வுக்கு 2 மாநில செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் அறிவிப்பு

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வுக்கு 2 மாநில செயலாளர்களை நியமித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலம் (கிழக்கு), புதுச்சேரி மாநிலம் (மேற்கு) என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில கழக செயலாளர்கள், அவர்கள் நிர்வகிக்கும் சட்டமன்ற தொகுதிகள் விவரம்.

    புதுச்சேரி மாநிலம் (கிழக்கு)-மாநில செயலாளர், சட்டமன்ற குழு தலைவர் ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ.

    இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகள்- உப்பளம், காமராஜ், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால் பேட்டை, ராஜ்பவன், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), திருபுவனை (தனி), பாகூர், ஏனாம்.

    மாநில செயலாளர்- ஓம்சக்தி சேகர் (முன்னாள் எம்.எல்.ஏ.)

    இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்- நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் (தனி), ஊசுடு (தனி), மங்களம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, உருளையன்பேட்டை, மாகி.

    மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அனைத்து பகுதிகளிலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாநில கழக செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இன்று முதல் செயல்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×