என் மலர்
செய்திகள்

கைது
புதுப்பாளையம் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது
செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக புதுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இருவரையும் தேடி வந்தார்.
இந்த நிலையில் புதுப்பாளையம் அருகே வினோத்குமாரும், அவர் கடத்திச்சென்றதாக கூறப்பட்ட இளம்பெண்ணும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சென்று இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக வினோத்குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Next Story






