search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

    கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 23). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே ராஜேஸ்வரி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அதற்காக அவர் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை என தெரிகிறது. கடந்த 8-ந் தேதி இரவு அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று ராஜேஸ்வரியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×