search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    தந்தை-மகனை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு

    தந்தை-மகனை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள சுதந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதப்பன் (வயது 60). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீக வயல் சுதந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இவருடைய வயலை அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான பாலசுப்பிரமணியன் என்பவர் மற்றொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதப்பன், அவரது மகன் வடிவேல் (35) ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பாலசுப்பிரமணியன், அவரது மனைவி செல்லக்கிளி உள்பட 7 பேர் சேர்ந்து வடிவேல், வரதப்பன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×