search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேலூர் அருகே லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி

    வேலூர் அருகே லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு களத்துமேட்டுதெருவை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 38), ஆட்டோ டிரைவர். இவர் காட்பாடியை சேர்ந்த சுப்பிரமணிக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்தார். பழனிவேலு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் நேற்று இரவு கொணவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவை பழனிவேலு ஓட்டிச்சென்றுள்ளார். மேல்மொணவூர் அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி விட்டு 3 பேரும் கொணவட்டம் நோக்கி வந்துள்ளனர். 

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சதுப்பேரிக்கு செல்லும் அணுகுசாலையில் ஆட்டோவை நிறுத்திய பழனிவேலு எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தால் சுப்பிரமணி, கார்த்திக் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரும் பழனிவேலு உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×