என் மலர்
செய்திகள்

தற்கொலை
பள்ளிகொண்டா அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிகொண்டா அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே ராமாபுரம் சாலை உள்ளது. இந்த சாலையில் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






