என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கறம்பக்குடி அருகே பாஜக கொடியை கழற்றி வீசிய வாலிபர் கைது
Byமாலை மலர்5 Nov 2020 2:30 PM GMT (Updated: 5 Nov 2020 2:30 PM GMT)
கறம்பக்குடி அருகே பாஜக கொடியை கழற்றி வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் பா.ஜ.க.எஸ்.சி, எஸ்.டி பிரிவின் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை நேற்று முன்தினம் யாரோ கழற்றி அப்பகுதியில் வீசி சென்றிருந்தனர். இதுகுறித்து கறம்பக் குடி பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த மதன் (வயது 25) என்ற வாலிபர் பா.ஜ.க. கொடியை கழற்றி வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மதனை கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட் டை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X