என் மலர்
செய்திகள்

தற்கொலை
திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 27). இவர் கடந்த சில தினங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






