என் மலர்
செய்திகள்

விபத்து
திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
திருப்பத்தூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது75). இவர் பிள்ளையார்பட்டியில் இருந்து திருக்கோஷ்டியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொண்டு நடந்து வீடு திரும்பியுள்ளார்.
அப்போது தானிப்பட்டி விளக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் முத்துக்கருப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






