என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் கணவருடன் இளம்பெண் தஞ்சம்
Byமாலை மலர்1 Nov 2020 9:03 AM GMT (Updated: 1 Nov 2020 9:03 AM GMT)
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யபாரதி கலைமணி (வயது 21). இவர் நேற்று தன்னுடைய காதல் கணவரான காட்டுமன்னார்கோவில் மேலநெடும்பூர் கிராமத்தை சேர்ந்த பரணி (27) என்பவருடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், பரணியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய வீட்டில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யபாரதி கலைமணி (வயது 21). இவர் நேற்று தன்னுடைய காதல் கணவரான காட்டுமன்னார்கோவில் மேலநெடும்பூர் கிராமத்தை சேர்ந்த பரணி (27) என்பவருடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், பரணியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய வீட்டில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X