என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
கோத்தகிரி அருகே மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 24). லாரி கிளீனர். இவர் கடந்த 11-ம் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் மாடியில் நிறுத்தி விட்டு சென்றார். அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் கட்டபெட்டு அருகே உள்ள அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவர் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரகாசை கைது செய்தனர்.
Next Story






