என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்- சலவை தொழிலாளிகள் 2 பேர் பலி
Byமாலை மலர்31 Oct 2020 1:45 AM GMT (Updated: 31 Oct 2020 1:45 AM GMT)
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் சலவை தொழிலாளிகள் 2 பேர் பலியாகினர்.
காரிமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 53). இவருடைய உறவினர் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (56). சலவை தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் 2 பேரும் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் ஓட்டி சென்றார். பின்னால் ரங்கநாதன் அமர்ந்து இருந்தார். அப்போது காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் ரங்கநாதன், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்த தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உறவினர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 53). இவருடைய உறவினர் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (56). சலவை தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் 2 பேரும் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் ஓட்டி சென்றார். பின்னால் ரங்கநாதன் அமர்ந்து இருந்தார். அப்போது காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் ரங்கநாதன், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்த தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உறவினர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X