என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு
Byமாலை மலர்28 Oct 2020 4:42 AM GMT (Updated: 28 Oct 2020 4:42 AM GMT)
என்ஜினீயரிங் படிப்புக்கான 4வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை:
2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில், 4-வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் முதல் 3 கட்ட கலந்தாய்வு முடிவில் 41 ஆயிரத்து 924 இடங்கள் மட்டுமே நிரம்பின. 4-ம் கட்ட கலந்தாய்வுக்கு சுமார் 40 ஆயிரத்து 573 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். முன்பணம் செலுத்துதல், விருப்ப இடங்கள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீட்டை உறுதி செய்வது போன்றவை முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இறுதி ஒதுக்கீடு ஆணை ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவ-மாணவிகளுக்கு இன்று அளிக்கப்பட இருக்கிறது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மொத்தமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட 4 கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு அதைவிட குறைவாகவே இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில், 4-வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் முதல் 3 கட்ட கலந்தாய்வு முடிவில் 41 ஆயிரத்து 924 இடங்கள் மட்டுமே நிரம்பின. 4-ம் கட்ட கலந்தாய்வுக்கு சுமார் 40 ஆயிரத்து 573 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். முன்பணம் செலுத்துதல், விருப்ப இடங்கள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீட்டை உறுதி செய்வது போன்றவை முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இறுதி ஒதுக்கீடு ஆணை ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவ-மாணவிகளுக்கு இன்று அளிக்கப்பட இருக்கிறது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மொத்தமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட 4 கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு அதைவிட குறைவாகவே இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X