search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு (கோப்புப்படம்)
    X
    என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு (கோப்புப்படம்)

    என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

    என்ஜினீயரிங் படிப்புக்கான 4வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    சென்னை:

    2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில், 4-வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.

    மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் முதல் 3 கட்ட கலந்தாய்வு முடிவில் 41 ஆயிரத்து 924 இடங்கள் மட்டுமே நிரம்பின. 4-ம் கட்ட கலந்தாய்வுக்கு சுமார் 40 ஆயிரத்து 573 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். முன்பணம் செலுத்துதல், விருப்ப இடங்கள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீட்டை உறுதி செய்வது போன்றவை முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இறுதி ஒதுக்கீடு ஆணை ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவ-மாணவிகளுக்கு இன்று அளிக்கப்பட இருக்கிறது.

    பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மொத்தமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட 4 கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு அதைவிட குறைவாகவே இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×