search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிதம்பரத்தில் போலீஸ்காரரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

    சிதம்பரம் அருகே போலீஸ்காரரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி வெள்ளாற்றின் தென்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். இதையடுத்து மணல் கடத்தலை போலீசார் தடுக்க சென்றனர். 

    அப்போது போலீஸ்காரர் செல்வகுமாரை மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மேலமூங்கிலடி வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த வீரமணி மகன் சபா என்கிற சபாநாயகம் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    மற்றவர்களை தேடி வந்த நிலையில் மேல மூங்கிலடி கிழக்கு தெருவை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி புகழேந்தி (59), நாகராஜ் மகன் விமல் ராஜ் (21) ஆகிய 2 பேரையும் சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குள்ளன் என்கிற ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×